முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 15 டிசம்பர், 2014

பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள்

  1. அனைத்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
  2. அனைத்து ஆசிரியர்களின் சம்பளப்பட்டியலுடன் இணைத்து, பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள  மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்.
  4. ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலமாக, பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
  5. பிற ஆசிரியர்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 
  6. சிறப்பாசிரியர்கள் தகுதித் தேர்வு, வேலைவாய்ப்பக பதிவு மூப்பு என குழப்பி ஊழலுக்கு வழிவகை செய்யாமல், மூன்றாண்டுகளாக பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிவரண்முறைச் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  7. கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
  8. பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
  9. நிலுவையில் உள்ள ஏப்ரல் 2014 முதல் வழங்க வேண்டிய, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- மாநில செய்தித்தொடர்பாளர்

1 கருத்து: